இலங்கை மின்சாரசபை வெளியிட்டுள்ள செய்தி!

இலங்கை மின்சார சபைக்கு Online (ஆன்லைன்) முறை மூலம் பொதுமக்கள் பணம் செலுத்துவது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் ஆன்லைன் முறையில் கட்டணங்களை செலுத்த முடியாமல் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்து. இதனடிப்படையில், எதிர்காலத்தில் இலகுவான முறையில் மக்களுக்கு கட்டணங்களை செலுத்த முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.